புதுச்சேரி மாநிலத்தில் கோவில் நிலங்கள், அரசு புறம்போக்கு மற்றும் தனிநபர் நிலங்கள் குறிப்பாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் சொத்துக்களை போலிப் பத்திரம் தயார் செய்து கபளீகரம் செய்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இதை பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், ஆட்சியாளர்க ளும், சில காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து செய்து கொண்டே இருக்கின்றன.
வரலாற்று பின்னணி புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, சாரம் வருவாய் கிராமம்,ரீ சர்வே எண் 292/4 ,292 /5, 64,000 சதுர அடி கொண்ட சுமார் ரூ. 50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள நிலம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது.
மோசடி எண்:1 சபரி கல்வி நிறு வனத்தைச் சேர்ந்தவர்கள் 2011 ஆம் ஆண்டு மேற்கண்ட நிலத்தின் ஒரு பகுதியை திருவான்மியூர் ரத்தினவேல், மோகன சுந்தரி தம்பதியிடம் இருந்து வாங்கியதாக உரிமை கோருகின்றனர்.ஆனால் அவர்கள் அனுபவ உரிமையின் அடிப்படையில் விற்பதாகவும், வாங்கிய தாகவும் கூறப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரம் 3127/2010 ,தேதி 7.9.2010 உடன் மூலப்பத்திரம் எதுவும் இல்லாமல் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது? இப்படி பதிவு செய்ய முடியுமா? இதுபோன்ற எத்தனை பத்திரங்கள் பதிவு நடந்திருக்கின்றன? போன்ற கேள்விகளுடன் நில மோசடி தொடங்குகிறது.
மோசடி 2: சபரி கல்வி நிறுவனம், பெரம்பூர் மனோகரன் என்பவரிடமிருந்து பெற்ற கடனுக்காக, இந்த நிலத்தை அடமானம் வைத்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்த நிலத்தை அவரிடமே கிரயம் கொடுத்து விடுகிறது. அவர் அரசி யல் செல்வாக்கு உடையவர்களின் பினாமி யாகவும் செயல்படுவதாகவும், அத்துடன் பெரிய அளவில் சீட்டு கம்பெனி நடத்தி வந்ததாகவும் அறியப்படுகிறது.
தனது சீட்டு கம்பெனியில் ஒரு கோடி ரூபாய் சீட்டு சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடிய வில்லை, அதற்கு பதிலாக புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் நிலத்தின் ஒரு பகுதியை சுமார் 32 ஆயிரம் சதுர அடியை கிரயம் கொடுக்க முன்வருகிறார்.
சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் பணத்திற்கு பதிலாக இதுவாவது கிடைக்கிறது என்று ஒப்புக் கொண்டார்கள். அப்போது சதுர அடி மார்க்கெட்டில் ரூ.5000 விற்பனையான நிலையில் சதுர அடி ரூ.3000க்கு பத்திர பதிவு செய்யப்படுகிறது.
பின்னர் இந்த நிலத்தை வாங்கியவர்க ளுக்கு இது கோவில் நிலம் என்று தெரிய வந்தவுடன் கோவில் நிலத்திற்கு நாங்கள் ஏதேனும் பணம் கொடுத்து விடுகிறோம், என்று புலம்பி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் செங்கல்பட்டு,தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சொத்தின் பூர்வீக வரலாறு
1930 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அப்போதைய பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த,காபந்து அடமான அலு வலகத்தில், இந்த இடம் குறித்த வழக்கு நடந்திருக்கிறது. இந்த இடம் இந்த அறிக்கையின்படி உழவர்கரை, சாரம் கிராமத்தில் கதாஸ்தர் எண் 156, பைமாஷ் எண் 285, அடங்கிய இந்தச் சொத்து பாலசுப்ரமணிய முதலியாருக்கு சொந்தமானது என்று அறியப்படுகிறது.
இந்த வழக்கிற்கு பின் மேற்கொண்ட சொத்துக்களை இந்த மூன்று சகோதரர்களும் பிரித்துக் கொண்ட தாகவும், சம்பந்தப்பட்ட இந்தச் சொத்து பால சுப்ரமணியம் முதலியாருக்கு சொந்தமான தாகும் கருதப்படுகிறது. பின்னர் அவர் அன்றாடம் தான் வழிபட்டு வந்த காமாட்சி அம்மன் கோவில் தேவஸ்தானத்திற்கு உயில் மூலம் எழுதி வைத்துவிடுகிறார். இது வரலாற்றின் ஒரு பகுதி.
புதிய உயில் உருவானது
1995 ஆம் ஆண்டு இன்னொரு உயில் கண்டறியப்படுகிறது. இது நோட்டரி ஹலீல் பாஷா முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலசுப்ர மணியம் முதலியார் இடது கை பெருவிரல் ரேகை பதிந்த தாக தெரிகிறது.
இதில் முத்துசாமி ஆசாரி ரூ. 3000 கடன், போக்கியம் ஆகிய விவகாரங்கள் எல்லாம், சொல்லப்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு வாரிசு இல்லாததால் முத்தியால்பேட்டை லூர்துசாமி மகன் பெரியநாயகி சாமி ஆகியோர் இந்த சொத்துக்களை அனுபவிக்க உரிமை உள்ளவர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால், பாலசுப்ரமணியம் முதலி யார் 1995 ஆம் ஆண்டு டிசம்பரில் திருக்கோவிலூரில் இறந்ததாக இறப்புச் சான்றிதழ் தெரிவிக்கிறது. இது உண்மை யானதா என்ற சந்தேகமும் நீடிக்கிறது! இந்தச் சான்றிதழ் படி அவர் இறப்புக்கு மூன்று மாதங்கள் முன்பு தான் இந்த உயிலை செப்டம்பர் 95இல், எழுதியதாக சொல்கிறார்கள். இந்த மோசடி உயில், தற்போது அம்பலமாகியுள்ளது.
சீட்டு கம்பெனியில் ஏமாற்றப்பட்டு பிளாட்டுகளாக பிரித்த 32,000 சதுர அடி போக, எஞ்சிய 32,000 சதுர அடி யில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்க ளுக்கும் அதிகாரிகளுக்கும் ஆசை வந்து விட்டது. ஏற்கெனவே பள்ளமான பகுதியில் இருப்பதால் அதை மண்ணைக் கொட்டி நிரப்ப ஆரம்பித்து விடுகின்றன.
இதை கேள்விப்பட்ட கோவில் நிர்வாகம், சொத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் இறங்குகிறது. இதில் முன்னணியில் இருந்த கோவில் நிர்வாகி ராஜகோபால் உடனடியாக இந்த 32 ஆயிரம் சதுர அடியை சுற்றி மிகப்பெரிய வேலியுடன், மிகப்பெரிய கதவையும் போட்டு கோவிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகையில் அங்கே நிர்மாணிக்கிறது.
ஆனால் இது இரண்டு நாட்களில் முழுவதும் சிதைக்கப்பட்ட, கதவுகளும் வேலிகளும் அப்புறப் படுத்தப்படுகின்றன. அதை முன்னின்று நடத்தியது தொகுதி யின் பாஜகவின் புதிய வருகை சட்ட மன்ற உறுப்பினர் ஜான்குமார். தனக்குப் பின்னர் அதிகாரமும், ஒன்றிய அரசும் இருந்தால் இப்படிப்பட்ட அடா வடித்தனத்தை செய்தார்.
32 ஆயிரம் சதுர அடியில் ஒரு பகுதியை தனது தந்தை, மகள், மற்றும் உறவினர்கள் பெயரில் நான்கு பிளாட்டு களை உடனடியாக பதிவு செய்கிறார். கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் கைமாறுகிறது.
அது மட்டுமின்றி, சாதாரண பொது மக்கள் நிலங்களையும், வீடுகளையும் வாங்கி பட்டா பெயர் மாற்றுவதற்கு ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டி ருக்கும் போது, ஒருவருக்கு மட்டும் மூன்றே மாதத்தில் அவரது பெயரில் பட்டாக்கள் எல்லாம் மாற்றி வழங்கப்படுகின்றன. வருவாய் துறை அதிகாரிகள் வெகு வேக மாக செயல்பட்டு நாம் அறிய முடிகிறது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தான் வாங்கிய பிளாட்டு களுக்கு உடனடியாக மிகப்பெரிய வேலி யையும்,கதவுகளையும் போடுகிறார்.ஆனால் இதில் பிரச்சனை உருவானது அனைத்தையும் உடனடியாக பிரித்து விடுகிறது .இந்த கோவில் நிலங்களை பாதுகாப்பதில் கோவில் நிர்வாகிகளில் ஒருவரான ராஜகோபால் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் இந்தச் சொத்தை விற்ற மணி கண்டன் போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு, காமாட்சி அம்மன் கோவிலுக்கு இந்த சொத்து சொந்தமானது என்று நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தார்.
முன்னாள் ராணுவ வீரரான இவர், இந்த சொத்துக்கு முழு உரிமையாளர் என கிரயம் வாங்கியதாக அறிவிக்கிறார். பவர் ஏஜென்ட் என்று கையெழுத்து போடு கிறார். இவரது சொத்து மதிப்பு மற்றும் வருமானம் எவ்வளவு ? அவர் மூன்று கோடி ரூபாய் பரிசு எப்படி கொடுப்பார்? இவர் ஆட்சியாளர்களில், அதிகாரிகளில் யாருடைய பினாமியாக இருக்கிறார்?என்ற சந்தேகம் எழுகிறது.
ஆனால் இவருக்கு ஒரு உண்மை தெரியவில்லை. இந்த சொத்து உள்ள இடத்திற்கு அருகில் உருவாகி இருக்கும் அன்னை நகர் பகுதியில் வாங்கிய பிளாட்டுகளுக்கு ஒவ்வொருவருடைய பத்திரத்திலும் எல்லை குறிப்பிடப் பட்டுள்ளது. (சக்குபந்தி) காமாட்சியம்மன் கோவில் நிலத்திற்குமேற்கே என்று போடப் பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தூக்கம் கலைந்த புதுவை அரசு
காமாட்சியம்மன் கோவில் நிலம் அப கரிப்பு வழக்கில் விசாரணை தொடங்கி இருக்கிறது .சார் பதிவாளர், மணி கண்டன், அருள்ராஜ் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இரண்டு வருவாய் துறை உயர்மட்ட அதி காரிகள் குற்றவாளிகள் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால் விசாரணை மிகவும் மந்தகதியிலேயே போய்க்கொண்டி ருக்கிறது.
அரசு நிலங்கள், கோவில் நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஒரு தொடக்க நடவடிக்கையாக இது மேற்கொள்கிறது.
புதுதில்லியில் துணை முதல்வர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். பக்கத்து மாநிலத்தில் ஊழல் செய்ததாக அமைச்சர் விசாரிக்கப் படும் சூழ்நிலையிலேயே அதிகாரம் இல்லாவிட்டாலும் ஆளுநர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குகிறது .
ஆனால் புதுச்சேரியில் நேரடியாக ஊழல் நடவடிக்கைகள் ஈடுபட்டாலும் கோவில் சொத்தை தன் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டாலும் கண்டும் காணாமல் இருக்கிறது ஒன்றிய அரசின் உள்துறை. உள்துறையின் பிரதிநிதி, மூத்த சகோதரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் அம்மையாரோ உறக்கத்தில் இருக்கிறார். ஊழல் செய்த வர்கள் பாஜகவில் அதனுடைய ஆதரவு பெற்றிருப்பதால் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்க மாட்டோம் என்ற அதிகார ஆணவம் உச்ச நிலையில் புதுச்சேரியில் நிலவுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
சிபிஎம் இன்று போராட்டம்
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் பாரபட்சம் இல்லாமல் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும். இதில் முக்கிய பின்புல மாக இருக்கக்கூடிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவில்களில் உள்ள அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தும் மின்னணு முறையில் ஆவணப்படுத்துவோம் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும். பத்திரப் பதிவுத் துறைக்கு மாநில முதல்வர் தான் பொறுப்பு என்ற அடிப்படையில் 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் பத்திரப் பதிவுத் துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
தொடர்ந்து விடுதலைக்குப் பிறகு மாநில அரசிடம் இருந்து மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தற்போது உள்ள நிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மோசடிகள் நடை பெற்று வருவது அம்பலமாகி இருக்கும் சூழலில் விசாரணை நடவடிக்கைகள் தீவிரம் படுத்தப்பட வேண்டும்.
புதுவை மாநிலத்தில் இலவச மனைப்பட்டா வழங்கியவர்களுக்கு நிலம் கொடுக்காமல் அலைக்கழிக்கப் படு கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்க ளின் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
காமாட்சி அம்மன் கோவில் நில அபகரிப்பு வழக்கில் உண்மையான குற்ற வாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்கிறார்.