districts

img

1969ஆம் ஆண்டு ஜூலை 19ந் தேதி 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன

1969ஆம் ஆண்டு ஜூலை 19ந் தேதி 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அதன் 55ஆம் ஆண்டை அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் சென்னை அயனாவரம் நிர்மல் பள்ளி மாணவர்களுடன் கொண்டாடினர். வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் சேகரன் பள்ளிக்கு இரண்டு கணினிகளையும், வளர்ச்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாயையும் கல்விக் குழுத் தலைவர் கு.பூபாலனிடம் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் டயான ஜூலியட், கல்விக் குழு உறுப்பினர் இரா.பெருமாள்சாமி, மேலாளர் டில்லிபாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.