சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து
அம்பத்தூர், செப். 22- சாலை விபத்தில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ஆம்னி பேருந்து நடுரோட்டில் கொழுந்து விட்டு எரிந்தது. நல்வாய்ப் பாக பயணிகள் உயிர் தப்பி னர். கோயம்பேட்டில் இருந்து வெள்ளிக்கிழமை காலை ஆம்னி பேருந்து ஒன்று பெங்களூருக்கு புறப்பட்டது. பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த தனியார் பேருந்து ஆம்னி பேருந்து மீது மோதியது. இதில் ஆம்னி பேருந்தின் பின் பகுதியில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதை யடுத்து 2 பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். பேருந்து ஓட்டுநரும், பொதுமக்களும் தீயை அணைக்க முயற்சி செய்த னர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப் பெரும்புதூர், இருங்காட்டுக் கோட்டை தீயணைப்பு வீரர் கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சிய ளித்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
ஏஐஎன்யு சிறுநீரக மருத்துவமனை ஆசியா ஹெல்த்கேர் வசமானது
சென்னை, செப்.23- ரோபோடிக் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முன்னோடியாக விளங்கும் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனையின் (ஏஐஎன்யு) பெரும்பான்மையான பங்குகளை சுகாதார பரா மரிப்பு சேவை வழங்கும் நிறுவனமான ஆசியா ஹெல்த் கேர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசியா ஹெல்த்கேர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஏஐஎன்யு–ல் மேலும் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக 600 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது. இந்த பங்குகளை வாங்கிய தன் மூலம் ஆசியா ஹெல்த்கேர் ஹோல்டிங்ஸ் நிறு வனம் இந்தியாவிலும், ஆசிய துணைக் கண்டத்திலும் சிறு நீரக துறையில் சிகிச்சை முறைகளை வழங்குவதோடு, தனது விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக நான்காவது சிறப்புத் துறையாக சிறுநீரக துறையிலும் இந்நிறு வனம் நுழைந்துள்ளது. ஏசியா ஹெல்த்கேர் ஹோல்டி ங்ஸ் நிறுவனம் கடந்த 2017–ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த மருத்துவமனை இந்தியா முழுவதும் தாய்மை மருத்துவமனைகளுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை கொண்டுள்ளது.
நிலம் ஒருவரிடம்! பட்டா ஒருவரிடம்!!
ரீசர்வே குளறுபடியை சரி செய்க: அரசுக்கு கந்தசாமி வேண்டுகோள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் கந்தசாமி:- கொல்லிமலை யில் நிலம் ஒருவரிடம் உள்ளது. பதிவேட்டில் வேறொருவர் பெயரில் நிலம் உள்ளது. இந்தப் பிரச்சனை அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து உள்ளது. “ரீ-சர்வே”-யில் உள்ள குளறுபடி திமுக அரசு சரி செய்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். கோதைமலையில் திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு தான் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் சாலை அமைப்புப் பணிகளும் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் வசதி படைத்தவர்கள் வருவாய்த்துறை உதவியோடு போலி பட்டாக்க ளை தயார் செய்ய முயற்சிக்கின்றனர். தமிழக அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி மலைவாழ் மக்களுக்கான இடத்தை அவர்களுக்கே வழங்கவேண்டும். கோதைமலையில் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மலை வாழ் மக்களை மீட்டது செங்கொடி இயக்கம் தான். அவர்களுக் கான உரிமைகளைத் பெற்றுத் தர தொடர்ந்து போராடுவோம். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா ளர் சாமி நடராஜன்:- “ 20 மலை கிராமங்களில் செங்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. இதற்குக் காரணம் மலைவாழ் மக்கள் செங்கொடியின் மீது வைத்துள்ள நம்பிக்கை தான். அவர்க ளுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தது யார் என்பதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி. மலைவாழ் மக்கள் மத்தியில் பல்வேறு அமைப்புகள் செயல் பட்டுவருகின்றன. அவர்களையும் நம் அமைப்போடு இணைக்க வேண்டும்” என்றார். வரவேற்புக்குழுப் பொருளாளர் ஏ.டி.கண்ணன் நன்றி கூறினார்.