திருவண்ணாமலை,ஜூலை30- திரு வண்ணா மலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் ஊராட்சியைச் சேர்ந்த 35 நபர்களுக்கு செங்கம் தனி வட்டாட்சியர் கடந்த 2004 ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பயனாளிகள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில்,அதே இடத்தை கடந்த 2018 ஆம் ஆண்டில் அன்றைய வட்டாட்சியர் 37 பேருக்கு பட்டா வழங்கி இணை யத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த தக வலை அறிந்ததும் பாதிக்கப் பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர். இது வரை எந்த நடவடிக் கையும் எடுக்க வில்லை. இத னால் ஆத்திரமடைந்த அந்த மக்கள் தனி வட்டாட்சி யர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.