ராணிப்பேட்டை, மே 16 - ஒராண்டாகியும் 8,000 நெல் மூட்டைகள் கொள்முதலுக்கான பணத்தை வழங்காதது குறித்து ராணிப்பேட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் மீண்டும் முறையீடு செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் தோணிமேடு வெள்ளம்பி கிராமங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 78 விவசாயிகளிடம் 8,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப் பட்டது. ஆனால் அதற்குரிய பணம் இதுவரை வழங்கப் படவில்லை. இதுகுறித்து கடந்த 2021 ஜூன் மாதம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரிடமும், ராணிப்பேட்டை ஆட்சியரிடமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மனு அளித்தனர். மேலும் விவசாயிகளின் 8,000 மூட்டை நெல்லுக்கான பணத்தை விரைந்து வழங்கக் கோரி ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு தலைமையில் கடந்த மாதம் காத்திருப்பு போராட்டமும் நடை பெற்றது. அலுவலக வாயிலில் போராடிய விவசாயிகளை ஆட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்தில் நெல் கொள்முதலுக்கான பணத்தை வழங்குவதாக தெரி வித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், ஒரு மாதமாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், தா.வெங்கடேசன் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்களன்று (மே 16) மீண்டும் முறையிட்டனர். அப்போது தோணிமேடு நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு புலனாய்வு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், நெல் மூட்டைகளை பெற்றுச் சென்ற வியாபாரி மீது விவசாயிகள் சங்கம் சார்பில் குற்றப் புலனாய்வு பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.