districts

img

கரடு முரடான சாலைகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, ஆக.17- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகொண்டப் பள்ளி ஊராட்சி எடைய நல்லூர், கிருஷ்ணா குடியிருப்பு பகுதி, அஞ்செட்டி மேஸ்திரி பகுதி மஞ்சுநாத் நகர், வெங்கடேஷ் நகர் பகுதிகளில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. இங்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு என்று அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்படாமல் உள்ளது. மத்திகிரியில் இருந்து குசினி பாளையம் வரையிலான சாலை கரடுமுரடாக உள்ளது.  இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம் என்று பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கட்சியின் எடையநல்லூர் கிளை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மத்திகிரி பேருந்து நிலை யத்தில் செயலாளர் சந்திரசேகர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாநகர குழு உறுப்பினர் பி.ஜி.மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.கே.தேவராஜ் திம்மா ரெட்டி,முனி வெங்கடப்பா, பட்டேல், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.