தெருவோர வியாபாரிகள் சட்டப்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும்
சென்னை, ஆக. 16 - தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதா ரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்-2014ன் படி அரசு அதிகாரிகள், காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. ‘தெருவோரா வியாபாரிகளின் வாழ் வாதார மாநாட்டை ஆக.6 அன்று மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. கட்சியின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் நடை பெற்ற இந்த மாநாட்டில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநகராட்சி நகர விற்பனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் வியாபாரி சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், கார்ப்பரேட் நலன் களுக்காக தெருவோர வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண் டும், வியாபாரிகளை முழுமையாக கணக் கெடுத்து, அங்கீகார அட்டை வழங்க வேண் டும். வியாபார பகுதிகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தன்னிச்சையாக அகற்றுவதை நிறுத்த வேண்டும். மண்டல அளவில் நகர விற்பனைக் குழு அமைக்க வேண்டும், தெருவோர வியாபாரி களுக்கு குறைதீர்ப்பு குழுவை அமைக்க வேண்டும், தெருவோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இந்த தீர்மானங்களை உள்ளடக்கிய மனுவை, மாநகராட்சி இணை ஆணையர் லலிதாவிடம், கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வழங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, சென்னை மாநகர் சிறுகடை வியா பாரி சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் எம்.வி.கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை பல் மருத்துவத்தில் எஸ்.ஐ.எம்.ஏ.டி.எஸ் முதலிடம்
சென்னை, ஆக.16- சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (Saveetha Institute of Medical and Technical Sciences - SIMATS), நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை அமைப்பு (என்ஐஆர்எப்) வழங்கும் இந்தியத் தரவரிசை யின் ஒன்பது பிரிவுகளில், விண்ணப்பித்த அனைத்துப் பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளது. தற்போதைய தரவரிசையில் இந்த நிலையை அடைந்த ஒரே நிறுவனம் என்கிற பெருமையை சவீதா பல்கலைக்கழகம் பெற்றிருப்பதாக அப்பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இந்தத் தரவரிசை நடைமுறைக்கு கடந்த ஆண்டு 5,543 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றதைவிட, இந்த ஆண்டு இரட்டிப்பு அளவாக 10,885 நிறுவனங்கள் விண்ணப் பித்திருந்தன. அந்த நிறுவனங்களுடன் போட்டியிட்டு, சவீதா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பல் மருத்துவத்தில் முதல் இடத்தைப் பிடித்து, இந்தத் துறையில் அதன் முன்னிலையை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மற்ற பிரிவுகளிலும் SIMATS சிறப்பான இடங்களைப் பெற்றுள்ளது என சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் மற்றும் இணைவேந்தர் டாக்டர் தீபக் நல்ல சாமி ஆகியோர் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கொண்டாட்டம்
புதுச்சேரி,ஆக.16- சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கீழுர் நினைவு மண்டபத்தில் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. பிரெஞ்சு காலனி ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி பிரதேச கடந்த 1954 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. புதுச்சேரி, இந்தியா வுடன் இணைவது தொடர்பாக புதுச்சேரி மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் வாக் கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூர் கிராமத்தில் நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் இந்தியா உடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்த னர். அதைத் தொடர்ந்து பல்வேறு சட்ட நடை முறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962 ஆம் ஆண்டு ஆக. 16 அன்று புதுச்சேரி இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகா ரம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு, புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை முறைப்படி ஏற்றது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. விழாவில் வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏகேடி ஆகியோர் கீழுர் நினைவுச் சின்னத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் (பொறுப்பு) கலியபெருமாள் மற்றும் அதி காரிகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மாற்றத்திறனாளி இளைஞர்கள் கடலில் நீந்தி கின்னஸ் சாதனை
மாமல்லபுரம்,ஆக,16- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் களுக்கு, நீச்சல் பயிற்சி யளித்து வருகின்றனர். இப்பயிற்சி பெற்றவர் கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடை பெற்ற கடல் நீச்சல் போட்டி களில் பங்கேற்றுள்ளனர். தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கட லில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற் கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர். இவர்கள் வியாழக் கிழமை மாமல்லபுரம் வந்து சேர்ந்தனர்., மீனவர்கள் வர வேற்றனர். வெள்ளிக் கிழமை காலை மீண்டும் கட லில் நீந்தி மாலை ஈஞ்சம் பாக்கம் வந்தனர். சனிக் கிழமை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்ற னர்.