districts

img

வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு போராட்டம்

திருவள்ளூர், செப் 11- வேட்டைக்காரன் இன மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி திங்களன்று (செப்.11) வெள்ளியூர் வரு வாய்த்துறை அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட விளாம்பாக்கத்தில் இரண்டு தலைமுறைகளாக வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்ற னர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு 21 குடும்பங்களுக்கு மட்டும் குடிமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இதுநாள் வரையில் பட்டாவிற்கான நிலம் எங்கு உள்ளது என்பதை கண்டறிந்து அளந்து கல் நட வேண்டும் என அம்மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். எனினும் வரு வாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை.  இந்நிலையில் இந்த கோரிக்கையை வலி யுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடை பெறும் என சங்கத்தின் சார்பில் அறி விப்பு வெளியான வுடன், நிலம் அளக்கப்பட்டு கல் நட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை அம்மக்கள் வர வேற்றனர். மேலும் விளா பாக்கத்தில் விடுபட்ட 21 குடும்பங்களுக்கும், வெள்ளியூர் கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க வேண்டும், வெள்ளியூரில் மின் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று (செப் . 11) வெள்ளியூர் ஆர்.ஐ அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து  திருவள்ளூர் வட்டாட்சி யர் சுரேஷ் குமார் முன்னி லையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, விளாப்பாக்கத்தில் விடு பட்டவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். வெள்ளியூரில் உள்ள மக்கள் மந்தை வெளி புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் தளர்வு ஏற்பட்டவுடன் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரியம் அதிகாரிகளை கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்து பூர்வமாக அவர் உறுதி யளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்கா துரை, மாவட்டச் செய லாளர் ஜி.ராஜா, மாவட்ட தலைவர் டில்லி, மாநில துணைத் தலைவர் கண்ணாயிரம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம், ஒன்றிய செய லாளர் கே.முருகன், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஸ்வேதா, மாவட்டச் செயலாளர் டிக்சன் ஆகி யோர் பங்கேற்று பேசினர்.