கிருஷ்ணகிரி, டிச.30- அஞ்செட்டி வட்டம், செங்கொடிபுரத்தில் வசித்து வந்த பட்டியலின மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பட்டாக்க ளுக்கான நிலத்தை ஒப்படைவு செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் நடத்திய காத்திருப்பு போராட்டத்தை அடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், நாற்றம் பாளையம் ஊராட்சியில் உள்ளது. செங்கொடிபுரம். இங்கு, 1999 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டா இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவுக்கான நிலத்தை அளந்து அடையாளம் காட்ட வில்லை. இதுகுறித்து அந்த மக்கள் தொடர்ந்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்ற முறை யிட்டு வருகின்றனர். 25 ஆண்டுகள் கடந்து பல போராட்டங்களுக்கு பிறகும் நிலத்தை அரசு ஒப்படைவு செய்யவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் இணைந்த அந்த மக்கள், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருந்தி ரள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அன்றைக்கு பேச்சு வார்த்தை நடத்திய, வட்டாட்சியர் 2 மாதத்திற்குள் செங்கொடிபுரம், அத்தி மரத்தூர், சித்தாண்டபுரம், பூஞ்சோலை, காமராஜ புரம், பையில் காடு ஆண்டி யூர் மக்களுக்கு பட்டா வழங்குவதாக உறுதி கூறினார். ஆனால் 3 மாத மாகியும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்த நிலையில், 1999 இல் அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளுக்கு உரிய நிலத்தை ஒப்படைவு செய்ய வேண்டும், இலவச வீட்டு மனை கேட்டு மனு அளித்துள்ள பட்டியலின, பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான வர்களுக்கு உடனடியாக மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.31 அன்று ஊர்வலமாக சென்று அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் குமாரவடிவேல் தலைமை வகித்தார். தலைவர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர் முருகேசன்,பொருளாளர் எம்எம்.ராஜு,தமிழ்நாடு கோவில் அடி மனை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் அனுமப்பா, சிபிஎம் வட்டச் செயலாளர் தேவ ராஜன்,விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் நவீன், செயலாளர் செல்வம் கலந்து கொண்டனர். அஞ்செட்டி வட்டாட்சிய ரிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செங்கொடி புரம் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் 2025 ஜனவரி 8 ஆம் தேதி நிலம் அளந்து ஒப்படைவு செய்வதாகவும், அத்தி மரத்தூர், சித்தாண்டபுரம், பூஞ்சோலை காமராஜபுரம், பைல்காடு, மிலிதிக்கி, ஓதி புரம் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை பெற்று, கள ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு பட்டா வழங்குவதாகவும் கடிதம் மூலம் உறுதி யளித்தால் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.