திருவள்ளூர், மே.5- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பால் மும்முனை மின்சாரம் சீரமைக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததை தொடர்ந்து நடை பெற இருந்த காத்திருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்தில் கோனிகாரிடுப்பம், கொளத்தூர், ஜிபிஆர்.ஒட்டர் காலனி, சுப்பாரெட்டி, மிட்டூர், கே.ஆர்.புரம், அருந்தி காலனி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக மும்முனை மின்சாரம் வருவதில்லை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் விநி யோகம் செய்ய வேண்டும். ஆனால் வெறும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குவதாக விவசாயிகள் வேதனையை தெரிவித்தனர். இதனால் விவசாயிகளின் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்கள் இயங்கவில்லை. பல இடங்களில் விவசாய மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். வீடுகளிலும் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மே 6 அன்று காத்திருக்கும் போராட்டம் நடத்த திட்டமிருந்தனர். இந்த சூழலில் சனிக்கிழமையன்று (மே 4), காலை 11 மணியளவில் அதி காரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். இதனையொட்டி உதவி செயற்பொறியாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது அடுத்த 4 நாட்களுக்குள் கூடுதலான நேரங்களில் மும்முனை மின்சாரம் வழங்கவும், கே.ஜி.கண்டிகையில் ஏற்பட்டுள்ள குறைந்த ழுத்த மின்சாரத்தை 4 நாட்களில் சீரமைக்கப்படும், அட்டவணை அமைத்து சீரான மின்விநியோகம் செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்று போராட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. சீரான மின்சாரம் வழங்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு உடனே மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார். இந்த நடவடிக்கை விவ சாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் 60ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒயர்களை உடனடியாக மாற்ற நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. 2017ல் நிதி பற்றாக்குறையால் நிலுவையில் உள்ள ஜிபிஆர் கண்டிகை வருவாய் கிராமத்தில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்கும் பணியை துரிதப்பட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதற்கான கவனஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தலைவர்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், பகுதி தலைவர் ஜெயச்சந்திரன், கேசவலு, வேணுராஜா, திருமலைராஜா உள்ளிட்ட 10 கிராமங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.