districts

img

அரசு வழங்கிய பட்டா நிலத்தில் தலித் மக்கள் வீடு கட்ட அனுமதிக்காத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, செப்.14- ஓசூர் அருகே தலித் மக்க ளுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியை சேர்ந்த தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்த கிராமத்தின் பின்புறம் உள்ள சர்வே எண் 916 இல் 40 தலித் குடும்பங்களுக்கு 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. அரசு கொடுத்த பட்டா நிலத்தின் சர்வே எண்களில் உள்ள நிலத்தில் வீடு கட்டும் பணி களை மேற்கொண்ட போது ஆதிக்க சக்திகளை சேர்ந்த சிலர், தாழ்த்தப்பட்டவர்கள் இங்கு வீடு கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தகராறு செய்தனர். மேலும், அரசு அதிகாரிகளால் அளந்து நடப்பட்ட அளவை கற்களையும் பிடுங்கி எரிந்தனர். கடந்த 25 ஆண்டுகளாக இது குறித்து சம்பந்தப்பட்ட துறை வட்டாட்சியர்கள், நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டதற்கு இலவச வீட்டுமனைப் பட்டாகளுக்கான இடத்தை கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வில்லை என்று மழுப்புகிறார். தலித் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை அதே சர்வே எண்களில் மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் வீடுகள் கட்டி வசித்து வருவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்வ தில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் தலித் மக்களால் கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செய லாளர் ராஜா ரெட்டி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தேவராஜ் தலை வர் திம்மா ரெட்டி தலை மையில் நிர்வாகிகள் அந்தோணி, ஸ்ரீனிவாசன் உள்ளிட் டோர் சாராட்சியர் சரண்யாவிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து கோப்புகளை சரி பார்த்து வட்டாட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நட வடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.