districts

img

புதுவையில் காத்திருப்பு போராட்டம் வெற்றி!

புதுச்சேரி, ஆக.13- புதுச்சேரியில் பாகூர் கொம்யூன் பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் இலவச குடி மனைபட்டா பெறு வதற்கான ‘முன்னுரிமை அடை யாள அட்டை’ வழங்கிய வர்களுக்கு உடனடியாக இலவச மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.  இலவச மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், கரை யாம்புத்தூர் கிராமத்தில் 2015 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் நில அளவைத் துறை சார்பில் பிற்படுத்தப்பட்ட 54 குடும்பங்களுக்கு வழங்கிய பட்டாகளுக்கான இடத்தை  வழங்க வேண்டும். ஏழை- எளிய கூலி தொழிலாளர் கள், சாலையோரங்களி லும், நீர்நிலை ஓடை களை ஒட்டியும் சிறு குடி சைகள் அமைத்து வசிப்ப வர்களுக்கும் உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் என கொம்யூன் நிர்வாகத்திடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.13 அன்று வழுதாவூர் சாலை யில் உள்ள மாவட்ட ஆட்சி யர் அலு வலகம் முன்பு குடி யேறும் போராட்டம் நடை பெற்றது. பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமை தாங்கி னார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், மாநிலக்குழு உறுப்பினர் கள் கலியன், இளவரசி, கொம்யூன் கமிட்டி உறுப்பி னர்கள் கவுசிகன், கலைச் செல்வன், சேகர், வடிவேலு, அரிதாஸ் மற்றும் முருகை யன், வெங்கடாச்சலம், வளர்மதி உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர். முன்னதாக, குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் இருந்து குடியேறுவதற்கு பாய் தலையணை,கேஸ், அடுப்பு, பண்ட பாத்திரங்க ளுடன் ஊர்வலமாக வந்த னர். அப்போது, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி னர். இதனால்  ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்பட வில்லை. இதையடுத்து போராட்டத்தை தொடர்ந்த னர். ஆட்சியர் உறுதி பின்னர், சிபிஎம் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம்,செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், கொம்யூன் கமிட்டி செய லாளர் சரவணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலியன்,இளவரசி ஆகி யோருடன் மாவட்ட ஆட்சி யர் குலோத்துங்கன் பேச்சு நடத்தினார்.  அப்போது, நலத்துறை சார்பில் வழங்க வேண்டிய மனைப்பட்டாக்களை உடனே வழங்குவதாக உத்தரவாதம் அளித்தார். மேலும், மற்ற பகுதியில் வழங்க வேண்டிய மனை பட்டாக்களையும் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து வழங்க நட வடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். ஆட்சி யரின் உத்தரவாதத்தை தொடர்ந்து குடியேறும் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.