districts

img

விவசாயிகள் சங்க போராட்டம் எதிரொலி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உறுதி

கள்ளக்குறிச்சி, ஜன.7 - உளுந்தூர்பேட்டை அருகே அலங்கரி கிராமத்தில் சுடுகாட்டு பாதை சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அலங்கிரி கிராமம். இங்குள்ள மேட்டு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பழனிவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்து தகர கொட்டகை போட்டுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும். அதேபோல், பால்வாடி குறுக்குத் தெருவில் உள்ள ஆக்கிர மிப்பையும் அகற்றி நீண்ட நாட்களாக பொது மக்கள் பயன்படுத்தி வரும் பாதையை சீரமைத்து தர வேண்டும். சுடுகாட்டுப் பாதையை ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி  தவிச கிளை தலைவர் பி.பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தை யில், இரண்டு மாதத்திற்குள் சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உளுந்தூர் பேட்டை வருவாய் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு அதிகாரிகள், சங்கத்தின் மாவட்டத் தலைவர் டீ.ஏழுமலை,மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.ரகுராமன்,ஒன்றியச் செயலாளர் ஆர்.செல்வராஜ், தலைவர் பி.பாண்டியன், பொருளாளர் என் ராஜாமணி, ராஜகோபால், எம்.முகமதுரபிக், என்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.