சென்னை, அக். 24- ராயபுரம் மூலக்கொத்தளம் திட்டப் பகுதி 1, 2இல் சேதமடைந்துள்ள குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் வண்ணாரப் பேட்டை மூலக்கொத்தளத்தில் 44 ஏக்கர் பரப்பளவில் 319 ஆண்டுகள் பழமையான சுடுகாடு உள்ளது. சுடுகாட்டு பயன்பாட்டிற்கு 32.49 ஏக்கர் நிலம் போக, 11.51 ஏக்கர் நிலம் பயன்பாடின்றி இருந்தது. அதை சென்னை மாநகராட்சி, குடிசை மாற்று வாரியத்திற்கு நில மாற்றம் செய்து கொடுத்தது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மூலக்கொத்தளம் திட்டப்பகுதி 1 தூண் தளத்துடன் 9 மாடிகளுடன் 648 குடியிருப்புகளும், திட்டப்பகுதி - 2 தூண் தளத்துடன் 11 மாடிகளுடன் 396 குடியிருப்புகள் என 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணி 2018இல் தொடங்கப் பட்டு டிசம்பர் 2020இல் பெரும்பாலான கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப் படாமல் இருந்தது. பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பின் எல்லா சான்றி தழ்களும் பெறப்பட்டு தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு திறந்து வைத்தார். ஒவ்வொரு குடியிருப்புக்கும் ரூ. 4.5 லட்சம் பங்குத்தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் அவ்வளவு பணம் செலுத்த இயலாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல கட்ட போராட்டங்க ளில் ஈடுபட்டனர். இதையடுத்து ரூ.3 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு, ஒவ்வொரு குடியிருப்புக்கும் ரூ.1.5 லட்சம் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது.
227 வீடுகளுக்கு ஒதுக்கீடு ஆணை முதற்கட்டமாக 227 வீடுகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு தற்காலிக குடி யிருப்பு ஆணை வழங்கிப்பட்டது. நவம்பர் மாதம் 228 பேருக்கு குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்பட்டது. அதேபோல் சேப்பாக்கம், மதுர வாயல், கண்ணப்பர் திடல் பகுதியை சேர்ந்தவர்களுக்கு 114 வீடுகள் வழங்கப்பட்டது. அப்போது ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டத்தில் குடிசை வீடுகளில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் உள்ள னர். எனவே அங்கு வசிப்பவர்களுக் கும் இதில் குடியிருப்புகள் ஒதுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து 360 குடி யிருப்புகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு. 230 பேருக்கு வழங்கப் பட்டது. படிக்கட்டில் விரிசல் குடியிருப்பின் தளங்களில் இருந்து தண்ணீர் கசிகிறது, படிகட்டில் விரிசல் ஏற்பாட்டுள்ளது. தரை தளத்தில் நீர் ஊற்றெடுத்து வருகிறது. மின்சார இணைப்பு முறையாக இல்லாததால் மக்களின் அச்சத்துடன் வாழும் சூழ் நிலை உள்ளது. மேலும் ஒரு பிளாக் கிற்கு இரண்டு லிப்ட் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தா லும் ஒரு லிப்ட் மட்டுமே வேலை செய்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராயபுரம் பகுதி குழு சார்பில் அந்த குடியிருப்புகளை சென்று பார்வை யிட்டு, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்ராஜ், காவல் உதவி ஆணையர் சதாசிவம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்புகளை உடனடி யாக சீரமைத்து தர வேண்டும், பாதுகாப் பான மின் இணைப்புகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடியிருப்புகள் தரமானதா என்பதை ஐஐடி மூலம் பரிசோதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அதி காரிகள் உடனடியாக குறைகள் சீரமைக்கப்படும் என்றும், ராமதாஸ் நகர் பிரிவில் தோட்டம் மக்களுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள குடி யிருப்புகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், சி.முருகேசன், எம்.எஸ்.ஜுகைப், ஜா.அபீத்துணிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.