districts

img

பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது அதிகாரிகள் அதற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும்

சென்னை மாநகராட்சி, 98 வது வட்டத்தில் மின்வெட்டு ஏற்படும் நேரங்களில்  தொடர்பு கொள்ளும் போது அதிகாரிகள் போன் எடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது அதிகாரிகள் அதற்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும், தொடர் மின்வெட்டு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (ஆக.9) தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி மனு அளித்து பேசினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.எல்.மனோகரன், டில்லி பாபு உள்ளனர்.