புதுச்சேரி, பிப்.12- நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க கோரி செல்லிப்பட்டில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட செல்லிபட்டு,வம்பு பட்டு ஆகிய கிராமங்களுக்கு 5 ஆண்டு கால மாக கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்படவில்லை. வேலை வழங்க கோரி தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. செல்லிபட்டு கடைவீதியில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர்கள் கல்வராயன், ராமலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். மண்ணா டிப்பட்டு கமிட்டி செயலாளர் இரகு.அன்பு மணி,மாநிலக்குழு உறுப்பினர் மதிவாணன், கமிட்டி உறுப்பினர்கள் ஜே. முத்து, ரகுநாத், நாகராஜ், சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் உறுதி மறியலில் ஈடு பட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அதி காரிகள் நூறு நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்கப்படும் என்றும் செல்லிபட்டு சுடுகாட்டுப் பாதையை உடன டியாக அமைத்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியை ஏற்று சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.