districts

img

நேரடியாக கூலி வழங்குக கடலூரில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், பிப்.3 - கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கைலி உள்ளிட்ட ரகங்களுக்கு நேரடியாக கூலி வழங்கும் முறை நடை முறையில் உள்ள நிலையில், நெசவாளர்க ளுக்கு தறிக்கூலியை ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை மாநில கைத்தறி ஆணையர் பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறையால் ஏழை எளிய கைத்தறி நெசவாளர்களை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட கைத்தறிநெசவு பாவுப்பட்டறை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் செல்லங்குப்பத்தில் கைத்தறி துணை இயக்குநர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆர்.கல்யாண சுந்தரம், பொருளாளர் இ.தயாளன், துணைச் செயலாளர் எம்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநில பொதுச் செயலாளர் என்.பி.நாகேந்திரன், சிஐடியு மாவட்ட தலைவர் பி.கருப்பையன், மாவட்ட இணைச்செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.  இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் எஸ்.முருகவேல், எம்.ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் கே.குமார், எம்.அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.