பரனூர் சுங்கச்சாவடியை மூடாவிடில் அக்.30 அனைத்துக்கட்சிகள் போராட்டம்
செங்கல்பட்டு, அக். 14- காலாவதியான பரனூர் சுங்கச்சா வடியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் அக் 30 அன்று அனைத்து கட்சிகள் சார்பில் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத் கட்சி மற்றும் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பணத்தை பெருமளவில் கொள்ளையடித்து வரும்செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியை அகற்றி , அரச மைப்பு சட்டப்படி வாகனங்களின் தங்கு போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்து வதுடன் , மாநில அரசு விரைவாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பின் சார்பாக வலியுறுத்தப்பட் டுள்ளது. இந்த மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து கட்சி மற்றும் வணிக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை திரட்டி பரனூர் சுங்க சாவடி முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பரனூர் சுங்கச்சாவடி மூட வலியுறுத்தி முழு கடையடைப்பு போராட் டத்தை நடத்துவோம் என்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை,அக்.14- ஆயுத பூஜையை தொடர் விடுமுறையை யொட்டி சென்னை, பெங்களூரிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. அரசுஅலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோ தும். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக் கப்படவுள்ளது. அதன்படி சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதி களுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில்,ஆயுத பூஜையையொட்டி கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்பட வுள்ளது. பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலி ருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
ராயபுரத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னை, அக்.14- சென்னை ராயபுரம் பகுதியில் 16 முதல் 18ஆம் தேதி வரை குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மண்டலம் 5 ராயபுரத் திற்குட்பட்ட கண்ணன் தெரு, போஜராஜ நகர் ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சியால் நடைபெறுவதால், குடிநீர் பிரதான குழாயை மாற்றி அமைக்கும் பணிகள் சென்னை குடிநீர் வாரியத் தால் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி களுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி யோகம் எந்தவித தடையும் இன்றி வழக்கம்போல் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
சிப்காட் தொழிற்சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடலூரில் சிபிஎம் வலியுறுத்தல்
கடலூர், அக்.14- சிப்காட் தொழிற்சாலைகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடலூர் சிப்காட்டில் உள்ள டாக்ரோஸ் தொழிற்சாலையில் கண்ணாடி கிளாஸ், பைப் லைன் வெடித்து சிதறியுள்ளது. இதி லிருந்து வெளியேறிய ரசாயன புகை ஆலை மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்க ளுக்கும் பரவியது. இதனால் மக்களுக்கு சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டது. அரசு நிர்வாகம் துரிதமாக செயல்பட்டாலும் மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் தொடர்கிறது. ரசாயன தொழிற்சாலைகள் அதிகம் உள்ள கடலூர் சிப்காட் பகுதியில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடை பெற்று வருகிறது. சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளில் ஆபத்தான ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் ரசாயன பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? ரியாக்டர் போன்ற உற்பத்தி சாதனங்களில் உரிய பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா? அனு மதி பெற்றதை விட அதிகமாக ரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா? அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுத லாக உற்பத்தி நடக்கிறதா? பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்? என்பதை மாவட்ட நிர்வாகம், தொழிற்சாலைகளின் ஆய்வுத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூட்டாக இணைந்து கண்காணிக்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளினால் பாதிக்கப்படும் மக்கள் பயன்படக்கூடிய வகையில் தொழிற்சாலை நிர்வாகங்கள் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கடலூர் பகுதியில் அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு மாதவன் தெரிவித்திருக்கிறார்.
பாலியல் வன்கொடுமை
விழுப்புரம்,அக்.14- மரக்காணம் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப் பட்ட 27 வயது பெண், திண்டி வனத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து மனநலம் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்திய தோடு, பாலியல் தொல்லைகளை கொடுத்துள்ளார். பின்னர், திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.