காஞ்சிபுரம், செப்.25 - பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து அக்டோபர் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பரந்தூர் வட்டார விவசாயிகள் ஆலோ சனைக் கூட்டம் செட்டியார் பேட்டை சிஐடியு அலுவல கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தங்களின் வாழ்வாதா மான நிலத்தையும், வீட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றும் மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் குழுவின் அறிக்கையை காலதாமதம் படுத்தாமல் அரசு உடனடியாக வெளி யிட வேண்டும் என்றும் விவ சாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் தமிழ்நாடு அரசு வலுக்கட்டாயமாக நிலத்தை எடுப்பதற்கு கண்டனம் தெரிவித்து அக்.13 அன்று அனைத்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பசுமை விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம விவசாயிகள் முடிவு செய்தனர். இக்கூட்டத்திற்கு பி.குணசேகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட செய லாளர் கே.நேரு, தலைவர் என்.சாரங்கன் உட்பட 8 கிரா மங்களைச்சேர்ந்த விவ சாயிகள் கலந்து கொண்ட னர். இந்தக் கூட்டத்தில் பரந்தூர் வட்டார விவ சாயிகள் வாழ்வாதார பாது காப்பு குழு அமைக் கப்பட்டது. இதன் அமைப்பாளராக கே.நேரு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.