districts

img

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டை, காசி இல்லா மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பக்ரீ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் காமராஜ் மாவட்டப் பொருளாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தை நிறைவு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.பால் பேசினார்.