சென்னை, அக். 10 - பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்திய எம்ஆர்பி செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவப்பணியாளர் தேர்வாணை யத்தின் (எம்ஆர்பி) வாயிலாக 10 ஆயிரம் செவிலியர்கள் தொகுப்பூதிய முiயில் பணியாமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தர வாதத்துடன் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படா மல் உள்ளனர். பணிநிரந்தரம் செயப்பட்ட வர்கள் பணி வரன்முறை செய்யப்படாமல் உள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற தீர்ப்பும் அமல்படுத்தாமல் உள்ளது. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிப்படி எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொதுசுகாதார துறை பரிந்துரைப்படி நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இரண்டாம் நிலை செவிலி யர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கலைஞர் நூற்றாண்டு மருத்துவ மனைக்கு புதிய பணியிடங்களை உரு வாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (அக்.10) டிஎம்எஸ் வளா கத்தில் உள்ள இயக்குநர் அலுவலகத்தை அதிகாலையிலேயே முற்றுகையிட்டனர். தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் இந்த போராட்டத்தை நடத்தியது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் சசிகலா, பொதுச்செயலாளர் சுபீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் செவிலியர்கள் பலர் மயக்கமுற்று விழுந்தனர்; சிலர் காயமடைந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 6 இடங்களில் சிறை வைக்கப்பட்டனர். உண்ணாநிலை போராட்டம் இந்த போராட்டத்தையொட்டி பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்தது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுதலை செய்து, டிஎம்எஸ் வளா கத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம். அதுவரை சிறை வைக்கப்பட்டுள்ள இடங்களில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபீன் அறிவித்தார்.