சென்னை,பிப். 12- செவிலியர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தினை அறிந்து அதனை செவிலி யர் பணியில் கையாள வேண்டும் என்று செங்கல் பட்டு மாவட்ட சுகாதார பணி கள் துணை இயக்குநர் டாக்டர் பி.பரணீதரன் கூறி னார். அதனை செவிலி யர் பணியில் கையாள வேண்டும் என்று கூறினார். காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலை கழ கத்தில் மாநில அளவிலான செவிலியர்கள் மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. “ 21ம் நூற்றாண்டின் உலக மயமாக்கலில் செவிலியர் பணியில் திருப்பங்கள், பிரச்சனைகள் மற்றும் சவால்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பி.பரணீதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டினை தொடங்கி வைத்தும், மாநாட்டு மலரினை வெளி யிட்டும் பேசுகையில் நாம் தொழில்நுட்ப உலகத்தில் வாழ்ந்து வருகிறோம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, இயந்திர அளவிலான கற்றல் போன்றவை கவனத்தை ஈர்த்து உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏராள மான புதிய தொழில் நுட்பங்கள் வந்துள்ளன,
இவைகள் மருத்துவதுறை முன்னேற்றத்திற்கு உதவும். நோயாளிகளின் உடல்நல பராமரிப்பில் செவி லியர்களின் பணி முக்கிய பணியாக உள்ளது. எனவே செவிலியர்கள் மருத்துவ தொழில்நுட்பதின் முன்னேற்றத்தினை அறிந்து அதனை செவி லியர் பணியில் கையாள வேண்டும் என்று கூறினார். மாநாட்டிற்கு எஸ்ஆர் எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் லெப்டினெண்ட் கர்ணல் டாக்டர் ஏ.ரவிக் குமார் தலைமை வகித்து பேசுகையில் இப்போது உலகம் குறுகிய வட்டத்திற்குள் வந்து விட்டது, இதன் மூலம் மருத்துவர் பணியில் செவி லியர்கள் பங்கு விரி வடைந்துள்ளது.திறமை உள்ள, திறன்மிகு செவிலி யர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிலியர் பராமரிப்பு என்பது முக்கியமானது, வளர்ந்து வரும் மருத்துவ வளர்ச்சிக்கு ஏற்ப செவிலியர்கள் தங்க ளின் அறிவு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஏ.சுந்தரம்,மருத்துவ கண்காணிப்பளர் டாக்டர் ஆர்.பாலமுருகன், தலைமை செவிலியர் எஸ். கவிதா ஆகியோர் பேசினார் கள். மாநாட்டில் பங்கேற்ற செவி லியர்கள் தங்கள் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பேசினார்கள். முடி வில் எஸ்ஆர்எம் செவிலி யர் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியை ஆர். விஜயலட்சுமி நன்றி கூறி னார். இந்த மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலியர் மாணவிகள் இதில் பங்கேற்றனர். முன்னதாக எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரி டீன் டாக்டர் கனியம்மாள் வரவேற்றார்.