விழுப்புரம், பிப்.1- ஆலைக்கு விவசாயிகள் அனுப்பி வைத்த கரும்புக்கான பாக்கித் தொகையை வழங்க மறுத்து வரும் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை பிப்.6 முற்றுகை யிடுவது என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க சிறப்பு தலைவர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.ராமமூர்த்தி கூறிய தாவது: கரும்பு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நியாயமான மற்றும் கட்டுப்படியான எப்ஆர்பி விலையை அறிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, மாநில அரசு ஆதரவு விலை அறிவிப்பது வழக்கம். அதன்படி, மாநில அரசு ஏற்கெனவே அறிவித்த ஆதரவு விலையை தனியார் ஆலை கள் தர மறுத்தன. இதனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தோம். இதில், விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் 1200 கோடி ரூபாய் பாக்கி தரவேண்டும். இந்த தீர்ப்பை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான ஆலைகள் மட்டுமே அமல்படுத்தி பணத்தை பட்டுவாடா செய்தது. ஆனால், தனியார் ஆலைகள் ஒன்று கூட மாநில அரசின் ஆதரவு விலையை தர ஒப்புக் கொள்ள வில்லை. மேற்படி உச்ச நீதிமன்ற தீர்ப்பில், மாநில அரசுகள் ஆதரவு விலைக்கு தனியாக தனிச்சட்டம் கொண்டு வரலாம் என்றும் உத்தர விட்டது. இந்தியாவில், பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டும் தான் அதற்கான சட்டம் இயற்றியது. அதன் விளை வாக பஞ்சாப், ஹரியான மாநில கரும்பு விவசாயிகள் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வரை விலை யாக பெறுகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே. ஆண்ட கட்சியும் சரி, தற்போது ஆளும் கட்சியும் சரி அப்படி ஒரு சட்டத்தை இயற்ற முன்வரவில்லை என்பதுதான் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் துயர கதையாக உள்ளது. இந்த பின்னணியில், விழுப்பு ரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம் பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை -1, செஞ்சி, செம்மேடு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை 2 இந்த இரண்டு சர்க்கரை ஆலைகள் மாநில அரசின் ஆதரவு விலை பாக்கி ரூ. 101 கோடியையும், 5A பிரிவின் அடிப்படையில் ஏற்பட்ட (லாபத்தில் பங்கு) பாக்கி ரூ. 13 கோடியையும் விவசாயிகளுக்கு தர மறுக்கிறது. சர்க்கரை ஆலைகள் இரண்டு பாக்கிகளும் 14 நாட்கள் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனுப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் தர மறுத்துவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 1 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இருமுறை காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை மட்ட நிர்வாகிகள் முன்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில், 14 நாட்களுக்குள் 5A பாக்கித் தொகை யை வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இதுவரைக்கும் வழங்கப்பட வில்லை. எனவே, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பிப். 6 அன்று முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சு.வேல்மாறன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.டி.முருகன், மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவ ராயன், பொருளாளர் பி.சிவர மன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கதி ரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.