districts

img

கடலூரில் செப். 13 ரயில் மறியல்

கடலூர், ஆக.31- கடலூர் மாநகர அனைத்து கட்சி கள், குடியிருப்போர் அமைப்பு, பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூர் சிபிஎம் அலுவலகத்தில்  நடைபெற்றது. கடலூர் அனைத்து குடியிருப்போர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட சிறப்புத் தலைவர்  எம்.மருதவாணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கோ. மாதவன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.அமர்நாத் (சிபிஎம்), திலகர், ஏ.எஸ்.சந்திரசேகரன், (காங்.) துணை மேயர் பா.தாமரைச்செல்வன், வழக்கறிஞர் திருமார்பன், மாவட்ட செயலாளர் செந்தில், மதிமுக கண்ணன், மாமன்ற உறுப்பினர் அருள் பாபு, கடலூர் குடி யிருப்போர் சங்க மாவட்டச் செய லாளர் பி.வெங்கடேசன், கடலூர் மாநகர பொது நல அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.என்.கே.ரவி, தமிழ்நாடு  மீனவர் பேரவை தலை வர் சுப்பராயன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பாலு, இரவிச்சந்திரன், எழுத்தாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பால்கி, தமுமுக மாவட்ட செயலாளர் ரஹீம், ரயில்வே பயணிகள் சங்கத்தின் வைரவன், விஜயகுமார் கலந்து கொண்டனர். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யம் கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பாப்புலியூர் ரயில் நிலை யத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்,  காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை  டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி, மஹால்,  உழவன், காரைக்கால், ஆகிய விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். சேலத்திலிருந்து முது நகர் வரை வரும் ரயிலை கடலூர் திருப்பாப்புலியூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். விழுப்புரம்- தாம்பரம் ரயில்கள் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் தர வேண்டும். விழுப்புரம் கடலூர் மயி லாடுதுறை தஞ்சாவூர் இரண்டாவது ரயில் பாதையை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்க வேண்டும். கடலூர்- புதுவை- சென்னை இருப்புப் பாதை திட்டத்தை  நிறை வேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளின் சார்பாக வருகின்ற செப்டம்பர் 13 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.