சென்னை, ஆக. 7-
வடசென்னை புத்தகத் திருவிழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
வட சென்னை சுங்கச்சாவடி அருகில் உள்ள தங்கம் திருமண மாளிகையில் 8ஆவது ஆண்டாக வடசென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
அதன் தொடக்க விழா லயன் ஜி.வரத ராஜன் தலைமையில் நடைபெற்றது. புத்தகத் திருவிழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்து, புத்தகத் திருவிழா குறித்த விழிப்பு ணர்வு பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
புத்தகக் கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார். இதில் ஏராளமான முன்னணி பதிப்பகத்தினர் தங்க ளது பதிப்புகளை சலுகை விலையில் விற்பனை செய்து வருகின்றனர். தினசரி மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடை பெறுகிறது. வரும் 15ஆம் தேதி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறும் என அமைப்பாளர் பி.டி.பாண்டி செல்வம் தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிஞர்களின் உரைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், திமுக மாவட்டச் செயலாளர் தா.இளைய அருணா, முனைவர் சுந்தர ஆவு டையப்பன், தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் உ.பலராமன், நடிகர்கே.ராஜன், மண்டலக் குழு தலைவர்கள் நேதாஜி யூ.கணேசன். தி.மு.தனியரசு. மாமன்ற உறுப்பினர் க.தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.