கள்ளக்குறிச்சி .நவ, 21 – அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் புதிய கிளையை அஞ்சல் துறையின் மத்திய மண்டல தலைவர் நிர்மலா தேவி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். திருச்சி மண்டலத்தில் 2,831 வது கிளை யாக திறக்கப்பட்ட நகர் கிளை அஞ்சலக விழாவிற்கு உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் தலைமை வகித்தார். புதிதாக தொடங்கப்பட்ட அஞ்சலகத் தின் முதல் சேமிப்பு கணக்கை ஊராட்சி மன்றத் தலைவர் கயல்விழி மணிகண்டன் திறந்து வைத்தார். விழாவில் பள்ளி மாண வர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கிய துடன் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளக் குறிச்சி மரசிற்பக் கலைக்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ள நிலையில் அதற்கான தபால் தலையையும் விழாவில் வெளியிட்டனர். முன்னதாக, விழாவில் பேசிய அஞ்சல் துறையின் திருச்சி மத்திய மண்டல தலைவர் நிர்மலா தேவி, அஞ்சல் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, பொது மக்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந் தாலும் அவர்கள் அஞ்சல் துறையின் மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்ப தற்கும், பணத்தை செலுத்துவதற்குமான சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.