districts

img

ஐஐடியில் எல்இடி திரைகளுக்கான ஆராய்ச்சிக்கு புதிய ஆய்வகம்

சென்னை, ஜன. 7- இந்தியாவிலேயே முதல்முறை யாக எல்இடி திரை குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக புதிய ஆய்வகத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. அமோலெட் டிஸ்பிளேக்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மையத்தால் இந்தியாவிலேயே எல்இடி டிஸ்ப்ளே உருவாக்கம் அதி கரிக்கவும் அதன் விலை வருங்காலத்தில் குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களை நம்மோடு இணைப்பது டிஜிட்டல் திரைகள் தான். 15 வரு டங்களுக்கு முன்பு எல்சிடி திரைகள் அதிக பயன்பாட்டில் இருந்த நிலை யில் தற்போது அனைத்தும் எல்இடி திரைகளாக மாறிவிட்டன. எல்சிடி திரையில் திரவ வடிவத்தில் இருக்கும் வேதியியல் பொருட்கள் நிரம்பி நமக்கு காட்சிகளாக வழங்கிய நிலை யில், எல்இடி திரைகளில் மைக்ரோ அளவிலான வெளிச்சம் பாய்ச்சும் டையோடுகளே இயங்கு பொருளாக விளங்குகிறது. மனிதரோமத்தை விட 100 மடங்கு சிறிதாக இருக்கும் குட்டி டையோடுகள் தான் வெளிச்சத்தை பாய்ச்சி காட்சிகளை நமக்கு காண்பிக்கிறது. இதற்கான தொழில்நுட்பம் இவ்வளவு நாட்கள் கிழக்கு ஆசிய நாடுகளிடமே இருந்த நிலையில் முதல் முறையாக எல்இடி குறித்தான ஆராய்ச்சி மையம் சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதற்கு காற்று புகாத ஆய்வகங்கள் அமைப்பது அவசியம் என்ற நிலையில், ஒரு கன அடிக்கு நூறு மைக்ரோ துகள்கள் கூட ஆய்வகத்திற்குள் செல்லக்கூடாது என்பதால் மிக கவன மாக வடிவமைத்துள்ளனர் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள். ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் திரை ஒவ்வொரு வினாடிக்கும் 60 முறை அணைந்து எரியும் நிலையில் ஒவ்வொரு திரையும் குறைந்தபட்சம் 25 மிக மெல்லிய அடுக்குகளை கொண்டதாக இருக்கிறது. இதை அனைத்தையும் சாத்தியப்படுத்தும் உயர்ரக கருவிகளோடு ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் எல்இடி திரை களின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எல்இடி திரைகள் கொண்ட ஸ்மார்ட்போன், டிவி, டிஜிட்டல் கேட்ஜெட்களை இறக்குமதி செய்யும் 2ஆவது நாடாக இந்தியா உள்ளது.