districts

img

சிதம்பரத்தில் புதிய மின் விளக்குகள் நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

சிதம்பரம், டிச.15- சிதம்பரம் நகரத்தில் உள்ள நான்கு வீதிகள் மற்றும் முக்கிய பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் போக்கு வரத்திற்கும் பாதசாரி களுக்கும் சிரமம் ஏற்பட்டு வந்தது.  இதனை போக்கும் வகையில் சிதம்பரம் நகரத்தில் உள்ள முக்கிய 4  வீதிகள் மற்றும் அதனுடைய அணுகு சாலைகளுக்கு ரூ1 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலங்கார எல்இடி மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடக்கு மெயின் ரோடு, எஸ்பி கோயில் தெரு உள்ளிட்ட சாலைகளில் அமைக்கப்பட்ட 78 அலங்கார மின் கம்பங்க ளுடன் கூடிய எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் முடிவற்றது.  இதனை சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே. ஆர்.செந்தில்குமார் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலை துவக்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா,  நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.