ராணிப்பேட்டை,ஜூலை26- ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் 2 புதிய புறநகர் பேருந்துகள் மற்றும் 3 மகளிர் விடியல் பயண நகரப் பேருந்துகளை அமைச்சர் ஆர். காந்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் வெள்ளியன்று (ஜூலை 26) துவக்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் முனைவர் . சந்திரகலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திரு மூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே. குணசேகரன், வேலூர் மண்டல பொதுமேலாளர் ஜெ. எட்வின் சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.