ராணிப்பேட்டை, செப்.27 - ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் பனப்பாக்கம் சிப்காட் பகுதி யில் 470 ஏக்கர் பரப்பள வில் 15 ஆயிரம் நபர்க ளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (செப். 28) வருகை தருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு தலைமையில் வெள்ளியன்று (செப். 27) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெமிலி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழகச் செய லாளர்கள், நிர்வாகி கள், ஒன்றிய அணி களின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.