districts

img

விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் ஏரியா கமிட்டி

விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் ஏரியா கமிட்டி சார்பில் பாலூர் பகுதியில் பகுதி குழு உறுப்பினர் ஆர்.வேல் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.சுப்புராயன், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம். ஜெயபாண்டியன், பண்ருட்டி வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை,. மாவட்டக் குழு உறுப்பினர் டி. கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினார்கள் கிளைச் செயலாளர் கே.அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக பகுதி குழு உறுப்பினர் ஆர். வெங்கடேசன் வரவேற்று பேசினார்.