சென்னை,ஏப்.21- சென்னை அருகே பிரமாண்ட விளை யாட்டு நகரம் ஒன்று உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை யில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக் கிழமை(ஏப்.21) பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், “தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட் டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் போட்டிகளில் வெற்றி வாகை சூட, உலகத் தரத்திலான விளை யாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்துவி தமான நடவடிக்கைளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ கத்தைச் சார்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை மேற்கொண்டு வெற்றி வாகை சூடுவார்கள்: மேலும், வட சென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர் களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளை ஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வட சென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கு கையுந்துப்பந்து, இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபாடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுக ளுக்கான வசதிகளோடு நவீன உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது” என்றார்.