districts

img

விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 5- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் நாவல் பாக்கம் கிராமத்தில் சட்டக் கூலி வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  செய்யாறு அடுத்த நாவல் பாக்கம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 52 கூலி வழங்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க வட்டார செயலாளர் சு.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப. செல்வன், தமிழ்நாடு விவசாய  சங்க மாவட்டச் செயலாளர் அ. உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் டி.வெங்கடேசன், கிளைச் செயலாளர் சதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு கூலி குறைத்து வழங்குவதை கைவிட வேண்டும்,  சட்டக்  கூலி ரூ.319 முழுமையாக வழங்க வேண்டும், தொழிலாளர்களை அலட்சியமாக பேசும், நாவல்பாக்கம்  மேற்பார்வையாளர் மீது  ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி னர்.