districts

img

எந்த சவாலையும் எதிர்கொள்ள கடற்படை தயார்: துணை தளபதி

அரக்கோணம், ஜூன் 18- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடந்த 22 வாரங்களாக பயிற்சிமேற்கொண்ட 98ஆவது கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அங்குள்ள வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடற்படையின் கிழக்கு பிராந்திய துணைத் தளபதி சஞ்சய் வத்சயன் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானி களுக்கு சான்றிதழ்களையும், பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த பயிற்சி விமானிக்கான பிளாக் ஆபீசர் கமாண்டிங் இன் சீப், கிழக்கு பிராந்திய கடற்படை கமாண்ட் ரோலிங் சுழற்கோப்பை வம்சி காஷ்முக்கு வழங்கப்பட்டது. சப் லெப்டினன்ட் குண்டே நினைவுப் புத்தகப் பரிசு, புனித் வம்சி கைஷிங்கிற்கும், ஒட்டு மொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்ததற்காக கேரள ஆளுநர் ரோலிங் சுழற்கோப்பை எஸ்.வம்சிதிரிஷ்னாவுக்கும் வழங்கப்பட்டது. கடற்படையின் கிழக்கு பிராந்திய துணைத் தளபதி சஞ்சய் வத்சயன் பேசுகை யில் நமது கடற்படை பல ஆண்டுகளாக பொறுப்பான மற்றும் நம்பகமான படை யாக வளர்ந்துள்ளது என்றார். இந்தியக் கடற்படையின்  விமானப்படை எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேசியா, ஓமன் மற்றும் ஐக்கிய அமிரகம் உள் ளிட்ட நாடு களுடன் பல இருதரப்பு பயிற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. பயிற்சி பெற்ற பைலட்டுகளுக்கு , கடலுக்குமேல் ஹெலி காப்டர் இயக்குதல், இரவு நேரத்தில் இயக்குதல் போன்ற கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பணியில் சிறந்து விளங்குவர். நாட்டின் பாதுகாப்பு பணியில் இவர்கள் பணி முக்கியத்துவம் மிகுந்ததாக உள்ளது என்றார் அவர்.