districts

தேசிய திறன் தேடல் தேர்வு

சென்னை, ஜுலை 28-

     தேசிய திறன் தேடல் தேர்வான  ANTHE (ஆகாஷ் தேசிய திறன்  தேடல் தேர்வு -2023) வரும் அக்டோபர் மாதம்  நடைபெறவுள்ளது.

     26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறை களிலும் அக்டோபர் 7-15 நாட்களில் இந்த தேர்வு நடை பெறும். 100 வழுக்காடு வரையிலான உதவித்தொகைக்கும் கூடுதலாக, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு  ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

    உதவித்தொகையை வெல்பவர்கள், JEE, மாநில CETs, பள்ளித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகவும் என்.டி.என்.எஸ்.இ மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித் திறனுள்ள கல்வி உதவித்தொகை பெறவும் தகுதிபெறுவார்கள் என்றும் ஆகாஷ் நிறுவன தலைமை செயல் அதிகாரி அபிஷேக் கூறினார்.