districts

img

திருநின்றவூரில் தேசிய நூலக வார விழா

திருவள்ளூர், நவ.20- 56வது தேசிய நூலக வார  விழா  திங்களன்று (நவ.20) திருநின்றவூரில்  முழு நேரக்  கிளை நூலகத்தில்  நடை பெற்றது. பள்ளி மாணவர்களுக் கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தப் பட்டு வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசளிக்கப் பட்டது.  திருநின்றவூர் அரசு  மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி யான  தாசர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாண வர்கள் கூடுதலாக போட்டி களில் பங்கேற்றனர். இதில் வாசகர் வட்ட தலைவர் கணேஷ் பாபு தலைமை தாங்கினார். பரணிதரன் வரவேற்றார்.நூலக பொறுப்பாளர் சுரேஷ்பாபு நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்தார்தாசர் மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் சூசன் டேவிட் சிறப்பு அளிப்பாளராக பங்கேற்றனர். தென்னக ரயில்வேத்துறை நிர்வாகி முனைவர். கண்ணாடி ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு, வாசகர் வட்ட பொறுப்பாளர்கள்பா.விஜயலஷ்மி, முன்னாள் தலைமையாசிரியர்கள் மு.வேலாயுதம், யாகீஸ் வரன், ஜெய்சங்கர், ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உலகத் தமிழ்கவிஞர் பேர வையின் பொதுச்செய லாளர் கவித்திலகம் உள்ளிட்டோர் பேசினர்.