ராணிப்பேட்டை, நவ. 28 – தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழாவையொட்டி ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியக் குழுத் தலைவர் பெ. வடிவேலு தலைமையில் புதனன்று (நவ. 27) சேந்தமங்கலம் கிராமம் முதல் சயனபுரம் வழியாக நெமிலி பேருந்து நிலையம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி துவக்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் வழங்கினார். முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ. 7 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ. 5 ஆயிரம் என ஆண், பெண் இரு பிரிவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நெமிலி அடுத்த பல்லாவரம் அரசுப் பள்ளி மாணவி யுவராணி தேசிய அளவிலான கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு சொந்த பணத்தில் ரூ. 20 ஆயிரம் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உடன் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு, நகர செயலாளர் ஜனார்த்தனன், நெமிலி தலைவர் ரேணுகாதேவி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.