சிதம்பரம், ஜூன் 26-
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் தரிசன விழாவையொட்டி பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய 4 நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாக கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயலில் பதாகை வைத்தனர்.
இது தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு எதிரானது எனக் கடந்த 24-ம் தேதி இந்து சமய அறநிலை துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமை யில் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறையினர் பதாகையை அகற்ற சென்றனர்.
அப்போது அவர்களுக்குக்காவல்துறை சார்பில் சரியான பாதுகாப்பு இல்லாததால் கோவில் தீட்சிதர்கள், செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் செயல் அலுவலர் தீக்சிதர்களின் கூச்சலை சமாளிக்க முடியாமல் கோவிலிலிருந்து வெளியேறினார்.
மேலும்இதுகுறித்து செயல் அலுவலர் சரண்யா பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிதம்பரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜூன் 26-ந்தேதி கோவில் தரிசன விழா முடிந்த பிறகு மாலை யில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் சந்திரன், சிதம்பரம் உதவி ஆட்சி யர்(பொறுப்பு) பூமா, ஏஸ்.பி. ரகுபதி மற்றும் இந்து அற நிலையத்துறை அலுவலர்கள் கொண்ட குழு மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை பாதுகாப்புடன் சென்று கனசபையில்( சிற்றம்பல மேடை) தீட்சிதர்கள் வைத்தி ருந்த பதாகையை அகற்றினர்.
அந்தப் பகுதியில் பலத்த காவல்துறையினர் பாது காப்பு பணியில் உள்ளதால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பதாகையை அகற்றிய பிறகு கனக சபையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் தீட்சிதர்கள் கனகசபையின் கதவை மூடிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.