அம்பத்தூர், செப்.18- ஆவடியில் ரூ.34 லட்சத்தில் 3 இடங்களில் சாலைப் பணிகளை சா.மு.நாசர் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி, 46ஆவது வார்டான லாசர் நகரில் சாலைகள் பழுதடைந்து இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமப்பட்டு சென்று வந்த னர். இது குறித்து ஆவடி சட்டப்பேரவை உறுப்பி னர் சா.மு.நாசரின் கவனத்திற்கு, மாநகராட்சி உறுப்பினர் மீனாட்சிகுமார் கொண்டு சென்றார். இதையடுத்து அவர், அப்பகுதியில் உள்ள சாலைகளை அதிகாரி களுடன் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, புதிய சாலைகளை அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதை யடுத்து நகர்புறச் சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத் தின் கீழ் ரூ.34 லட்சத்தில் 3 தெருக்களில் புதிய சாலை கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் விடப்பட்டு ஒப்பந்த தாரருக்கு பணியாணை வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை லாசர் நகரில் சாலை பணியை நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் ஜி.ராஜேந்தி ரன், திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், பேபி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.