திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் குமாரச்சேரி கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பெயர்ப்பலகை புதனன்று (டிச 27), திறக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு, ஒன்றியத் தலைவர் பி.அற்புதம், ஒன்றியச் செயலாளர் எம்.சின்னராசு. ஒன்றியப் பொருளாளர் தேவி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கிளை தலைவராக ஆர்.முத்துப்பாண்டியன், செயலாளராக கே.வினோத்குமார், பொருளாளராக எஸ்.தமிழரசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.