ராணிப்பேட்டை, நவ. 22 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் செயல்பட்டு வரும் முழுநேர கிளை நூலகத்தில் நூலகர் மு. அமுத வள்ளிக்கு தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான நல் நூலகர் விருது இந்த ஆண்டு (2023) வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, பொது நூலக இயக்கம் இணைந்து டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது 2023 இவ்விருதினை சீர்காழியில் நவம்பர் 20 அன்று நடைபெற்ற 56 வது தேசிய நூலக வார விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். உடன் பொது நூலக இயக்குநர் க. இளம்பகவத், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதை பெற்ற மு. அமுதவள்ளி தமிழக அரசு மற்றும் பொது நூலக இயக்குநருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.