தோழர் என்.சங்கரய்யா 103வது பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று (ஜூலை 21) குரோம்பேட்டையில் நடைபெற்றது. என்.சங்கரய்யா பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘தோழர் என்.சங்கரய்யா, பொதுவுடைமை வளர்த்த தமிழ்’ எனும் தலைப்பில் சு.வெங்கடேசன் பேசினார். இந்தக் கூட்டத்தில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.பி.பிரபாகரன், என்.சங்கரய்யாவின் மைந்தர்கள் எஸ்.சந்திரசேகர், எஸ்.நரசிம்மன், மகள் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.