districts

img

உள்ளூர் போராட்டங்களை வலுப்படுத்துவோம்!

சென்னை, அக். 19 - சாமான்ய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உள்ளூர் போராட்டங்களை வலுப்படுத்து வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூறினார். கட்சியின் மத்தியசென்னை மாவட்ட 24வது மாநாடு அக்.19-20 தேதிகளில் தோழர்கள் என்.சங்கரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கில் (காமராஜர் மாளிகை, அயனாவரம்) நடை பெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து  என்.குணசேகரன் பேசியதன் சுருக்கம் வருமாறு: மார்க் சூபெக்கர், எலான் மாஸ்க், அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளது மூலதன குவியலின் வேகம் சமூ கத்தை அச்சுறுத்துகிறது. இதற்கு நேர்மாறாக உழைப்பாளிகளின் உழைப்புக்கான ஊதியம் 24 டிரில்லியன் அளவு குறைந்துள்ளது. இந்த உழைப்புச் சுரண்டல்தான் முதலாளிகளின் லாபமாக, மூலதன குவிப்பாக மாறுகிறது. சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்தை மறுப்பதற்கும் இந்த சுரண்டல்தான் காரணம். ஏகாதிபத்தியத்திய நாடு களிடம் இருந்து போரை பிரிக்க முடியாது. உக்ரைனுக்கு ஆயு தங்களை கொடுத்து போரை தொடர்ந்து வருகின்றன. நேட்டோ படைகள் என்ற பெயரில் ஆசியப் பகுதியில் ஆதிக்கம் செய்யவும், சோசலிச சீனாவை தகர்க்கவும் முயற்சிக்கின்றன. போர், சுரண்டல், சொத்துக்குவியல் போன்றவற்றை உள்ளடக்கியது தான் ஏகாதிபத்தியம். எனவேதான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொய்வின்றி நடத்துகிறது. சாம்சங் போராட்டமும் உணர்த்து வது ஏகாதிபத்திய எதிர்ப்பைதான். முதலாளித்துவ கொள்கையை பின்பற்றும் நாடுகள்,

ஏகாதிபத்திய நாடுகளின் உத்தரவுக்கேற்ப செயல்படுகின்றன. ஒன்றிய பாஜக அரசும், அமெரிக்காவுடன் நெருக்கமாகி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி வருகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்து கிறது. கார்ப்பரேட் - வகுப்புவாத கூட்டு அரசாக செயல்படுகிறது. ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது. வகுப்புவாத சக்திகளை எதிர்த்து திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளை அணி திரட்டி போராடுகிறோம். அதே சமயம் நவீன தாராளமயக் கொள்கை வெளிப்படும் போது போராட்டம் நடத்த வேண்டும். ஒன்றிய அரசின் நிர்பந்தத்தை எதிர்கொள்ள உள்ள வழிகளை சுட்டிக்காட்டி அழுத்தம் தர வேண்டும். ‘சென்னை மாநகரம் உழைக்கும் மக்களுக்கானதே!’ என்ற மாநாட்டின் முழக்கம் மகத்தானது. இன்றைய நகரமய மாக்கல் முதலாளிகளுக்கானதாக உள்ளது. நகரப்புற மக்களுக்காக நடத்தப்படும் இயக்கங்களும் வர்க்கப் போராட்டங்களே. எனவே, உள்ளூர் போராட்டங் களை வலுப்படுத்த வேண்டும். இந்த வர்க்கத் திரள்தான் இடது மாடலை உருவாக்கும்; இவ்வாறு அவர் பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டில்  நடைபெற்ற பணிகள் மற்றும் அமைப்பு அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வும், நிதிநிலை அறிக்கையை செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசனும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மத்தியக் கழு உறுப்பினர் பி.சம்பத் நிறைவு ரையாற்றினார். வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன் நன்றி கூறினார்.