districts

img

பட்டு கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்

பட்டு கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், முத்ரா திட்டத்தின் கீழ் மானியத்தில் கடன் வழங்க வேண்டும், கைத்தறி உபகரணங்களை உடனே வழங்க வேண்டும், காப்பீடு வழங்க வேண்டும், சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைப்பாளர் எம்.வீரபத்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.பாரி, மாவட்டத் தலைவர் கே.காங்கேயன், சிபிஎம் நிர்வாகி வெ.மன்னார், சிஐடியு நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், சிவப்பிரகாசம், சிவாஜி, ரமேஷ்பாபு, கிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.