districts

சென்னை முக்கிய செய்திகள்

அவசர கதியில் முடிந்த மாநகராட்சி கூட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

சென்னை, டிச. 30 - மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முழுமையாக விவாதிக்காமல், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் அவசர கதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஜி.செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம் கடுமையான மழை, வெள்ளத்தை சந்தித்து மீண்டுள்ள சூழலில், மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கான அழைப்பிதழ் டிச.26 ஆம் தேதி மன்ற உறுப்பினர் களுக்கு கொடுக்கப்பட்டு, டிச. 29ஆம் தேதி அவசர, அவசரமாக நடத்தி  முடித்தனர்.  மக்களின் கோரிக்கைகள், எதிர் பார்ப்புகள் சார்ந்து உறுப்பினர்கள் விரிவான விவாதம் செய்யும் வகையில் மன்ற கூட்டம் நடைபெறவில்லை. குறிப்பாக, நேரமில்லா நேரத்தில் பேச வேண்டிய 15 மாநகர மன்ற உறுப்பினர்களில் 7 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு, மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப் பட உள்ள பொருள் மற்றும் குறிப்புகள் கூட்டம்  நடைபெறுவதற்கு முன்பு வழங்கப்பட வில்லை. சிபிஎம்  98வது மாமன்ற உறுப்பினர் மன்றக் கூட்டம் முடிந்த அடுத்த நாள்தான், குறிப்புகள் வழங்கப் பட்டுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. மன்றக் கூட்டத்தில் மாநகர மன்ற  உறுப்பினர்கள் தங்களது வட்டத்தின்  பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் நேர ஒதுக்கீடு அமைய வேண்டும். 150 மாமன்ற உறுப்பினர் களுடன் மாநகராட்சி செயல்பட்ட போது, முழுநாள் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது.  தற்போது 200 மாமன்ற உறுப்பினர்கள் உள்ள சூழலில், மன்றக்  கூட்டம் மாதத்திற்கு அரை நாள் மட்டும் நடத்துவது எந்தவகையிலும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, மன்றக் கூட்டங்கள், குறிப்பிட்ட கால இடை வெளியில்  உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து, விவாதிக்க வேண்டிய குறிப்புகள் முன்னே வழங்கி, அனை வரின் கருத்துக்களையும் எடுத்துரைக் கும் வகையில் நேர ஒதுக்கீடு செய்து, செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை, டிச.30- எர்ணாவூரில் காட்டுப் பன்றிகளின் தொல்லை தொடர்வதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி 14ஆவது தெருவில் வசிப்பவர் முனுசாமி (60). வியாழக்கிழமை (டிச. 28) இரவு  8 மணியளவில் அவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டுப்பன்றி முனுசாமியை தாக்கி யுள்ளது. இதில் அவருக்கு 5 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட் டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் முனுசாமியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில் இந்த பகுதியில் காட்டுப்பன்றி களின் அட்டகாசம் தொடர்கதையாக நிகழ்கிறது. இதனால்  பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக காட்டுப்பன்றிகளை பிடித்துச்செல்ல  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட முனுசாமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வரவேற்பு பெற்ற  ஸ்மார்ட் போன்

 சென்னை, டிச.30-  ஐக்யூஓஓ  ஸ்மார்ட்போன் நிறுவனம், சமீபத்தில் அறிமு கம் செய்த  ஐக்யூஓஓ 12 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர் கள் இடையே அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளது என்று ஐக்யூஓஓ நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.  இந்த விலைப் பிரிவில் அமேசான் இணையதளத்தில் 4.6 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்ட இந்தியாவின் சிறந்த  ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது. இந்த மதிப்பீடு எங்களுக்கு  மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருப்பதோடு, எங்களுக்கு உத்வேகத்தையும் அளிக்கிறது. அத்துடன் வாடிக்கை யாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் அது பிரதிபலிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித் துள்ளது.  12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கார்டுடன் வெளி வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,999 ஆகும். இது சலுகை விலையில் ரூ.50,999-க்கு கிடைக்கிறது.

ஓய்வூதியர் தின கருத்தரங்கம்

சென்னை, டிச. 30 - தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபல் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்  செயலாளர் எஸ். ஜெகதீசன், சென்னை மண்டலச் செயலாளர் கணேசன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் குரு சந்திரன், சென்னை மாவட்ட தலைவர் பி.எஸ்.அப்பர்,  கூட்டமைப்பு செயலாளர் என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் முத்துக் கமார் (போக்குவரத்து ஓய்வூ தியர் சங்கம்), பிரேமச்சந்திரன் (குடிநீர் வாரியம் ஓய்வு பெற்றோர் சங்கம்), பூபாலன் (ஓய்வு  பெற்ற ஆசிரியர் சங்கம்) உள்ளிட் டோர் பேசினர்.

மரிச்ஜாபியில் நடந்தது என்ன?:  இன்று நூல் வெளியீடு '
சென்னை, டிச.30- மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சியில் ஆயி ரக்கணக்கான தலித் அகதிகள் படுகொலை செய்யப்பட்ட தாக பல ஆண்டு காலம் பரப்பப்பட்ட பொய் பிரச்சாரத் திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மரிச்ஜாப்பியில் நடந்தது என்ன? என்ற நூல் டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்திய பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம் ) இருந்து அகதிகளாக மேற்கு வங்கத்தில் குடியேறிய ஆயிரக்கணக்கான தலித் மக்கள் ஜோதிபாசு தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டதாக ரோஸ் மல்லிக் என்ற கம்யூனிஸ்ட் விரோத கனடா ஆய்வாளர் ஆதாரங்கள் இல்லாமல் புனைவு கள் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அதே போல் பிஸ்வாஸ்,தீப் ஹல்தர் என்று பலரும் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இடதுசாரிகளுக்கு எதிராக குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஹரிலால் நாத் என்ற பத்திரிகையாளர்  “Marichjhapi : Asale ki Ghotechilo” என்ற ஆதாரப்பூர்வமான ஆய்வுப் புத்தகத்தை வங்காள மொழியில் எழுதி வெளியிட்டு இருந்தார். அப்புத்தகத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் படித்து தற்போது மேற்கு வங்கத்தில் முனைவர் பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவர் சங்கத் தோழர் சத்தீஸ்வரன் மொழிபெயர்ப்பில் தமிழ் மார்க்ஸ் கல்வி வட்டமும்  பாரதி புத்தகாலயமும் இணைந்து வெளிக்கொண்டு வருகின்றன. டிசம்பர் 31 அன்று சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் அமைந்துள்ள அரும்பு சிறார் நூல ரங்கில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது .சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி. ராம கிருஷ்ணன் புத்தகத்தை வெளியிடுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொள்கிறார்.சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்  கே.சாமுவேல் ராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வட சென்னை மாவட்ட செயற்குழு  உறுப்பி னர் எஸ்.பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்து கொள்கின்ற னர்.

போலி மருத்துவர்கள் மூன்று பேர்  பண்ருட்டியில் கைது

கடலூர்,டிச.30- பண்ருட்டியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் மருத்துவம் படிக்காமல் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு போலியாக மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதாக பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையில் தனிப்படை காவலர்கள் பண்ருட்டி பகுதியில் திடீரென ஆய்வு செய்தனர்.  அப்போது சென்னை சாலை, மணிநகர், ராசா பாளையம் ஆகிய இடங்களில் மருத்துவம் படிக்காமல் மெடிக்கல் கடை வைத்து போலி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.  இதையடுத்து மருத்துவம் படிக்காமல் வெவ்வேறு இடங்களில் மெடிக்கல் கடைகளில் போலியாக மருத்துவம் பார்த்து வந்த மணி (71), மணிகண்டன் (34), சீனிவாசன் (54) ஆகிய 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் கைது  செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்: அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

கள்ளக்குறிச்சி,டிச. 30- வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

சகோதரத்துவத்தை  வலுப்படுத்திய இஸ்லாமியர்கள்

கிருஷ்ணகிரி,டிச.30- கிருஷ்ணகிரி நகரில் அனைத்து மதத்தினருக்கும் நல்லிணக்கம், சகோதரத்துவம் ,ஒற்றுமை வலுப்படுத்தும் வகையில்,இந்து மதத்தினர் திருவிழாவின் போது இஸ்லாமியர்கள் பூஜைப் பொருட்களை வழங்குவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரியாஸ் அஸ்ரப் ஜாபர் ஜெலில், முனீர் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் கிருஷ்ணகிரி அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையின் போது 6 ஆம் ஆண்டாக பூஜைப் பொருள்கள் வழங்கியதுடன் அனைவருக்கும் உணவு வழங்கினர். இஸ்லாமிய இளைஞர்களின் மத நல்லிணக்க சேவையை அனைவரும் பாராட்டினர்.

 கடலில் மூழ்கி சென்னையில் 5 பேர் பலி

சென்னை, டிச,30- சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சிவ தான் (46). அவர் நிகழ்ச்சிகள் நடத்தும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரு கிறார். அவரது அலுவலகத்தில் 20 பேர் பணி புரிகின்றனர்.  2024 புத்தாண்டை கொண்டாடும் வகை யில் இவரும், அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கானத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு (உல்லாசப்போக்கிடம்) சென்ற னர். அங்குள்ள சினேகா கார்டன் கடற் கரைக்கு சென்றுள்ளார். இதில் 9 பேர் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது மிகப் பேரிய அலை ஒன்று 9 பேரும் இழுத்து சென்றது.  இதில் 2 பேர் தப்பி கரை சேர்ந்தனர். 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். சிவதான், அவரது மகள் நிவிதா (19), நவீன் (26), மானஸ் (18), பிரசாத் (18) ஆகிய 5 பேரை கடல் அலை இழுத்து சென்றது. இதை யடுத்து, காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் கானத்தூர் பகுதி மீனவர்கள் உதவியுடன் கடலில் தேடினர்.  சிவதான், நவீன் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டார். நிவிதாவை கடல் அலை 2 கி.மீ. தூரம் இழுத்து சென்றது. இதை யடுத்து கடலோர காவல் படையினர் மீன வர்கள் உதவியுடன் படகில் சென்று மீட்ட னர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலை யில் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் படகில் இரவு முழுவதும் தேடி னார்கள். கடலோர காவல் படையினர், கடற் படையினர், தீயணைப்பு படையினர், மீன வர்கள் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்ட னர். அதேபோல் ஹெலிகாப்டர் மூலமாக வும் தேடும் பணி நடைபெற்று வந்தது.  இந்த நிலையில், பிரசாத் உடலை ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மேலும் மானஸ் உடலும் கண்டெடுத்தனர். இதன் மூலம் கடல் அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள்.