முரசொலி ஆசிரியர் செல்வம் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வேலாங்கனின் மகன் சிவராமனின் மறைவையொட்டி தமிழ்நாடு யூனியன்ஆப் ஜெர்னலிஸ்ட் (டியூஜெ) சென்னை மாவட்டமையம் சார்பில் பெரியமேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. டியூஜெ மாநிலத்தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். உடன் சென்னை மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.தேவேந்திரன், ம.மீ.ஜாபர், அப்சர்பாஷா, மாநில நிர்வாகி முத்து ஆகியோர் உள்ளனர்.