ராணிப்பேட்டை,ஆக. 25 - ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நக ராட்சி வார்டு எண் 23, 2வது தெரு கால்வாயில் மலங்கள் மிதக்கும் கழிவுநீரை எந்தவித பாதுகாப்பு உப கரணங்களான கையுறை, காலுறை, முகக்கவசம் ஏது மின்றி பிளாஸ்டிக் பக்கெட் கொண்டு சோமசுந்தரம் காலனி பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர்கள் கழிவு நீரை சுத்தம் செய்து வரு கின்றனர். பாதுகாப்பின்றி செய்யும் இப்பணியை சோளிங்கர் நகராட்சி தலை வர், ஆணையர் ஆகியோர் எந்த சலனமும் இன்றி பார்த்துவிட்டு கடந்து செல்கின்றனர். மனித மலத்தை மனிதனே கையால் எடுக்கும் அவலம் பல அறிவியல் கண்டு பிடிப்புகள் வந்த பிறகும் நிகழ்வது கொடூரத்தின் உச்சக்கட்டமாகும். பட்டி யல் சமூகத்தினரை வஞ்சிக்கும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.