சென்னை,ஆக,27- நீரிழிவு நோயாளிகள் உள்பட அனைவரும் நார்ச்சத்து மிக்க சிறு தானியங்களை அன்றாட உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். சென்னை ராயபுரத்தில் காலஞ்சென்ற பிரபல நீரிழிவு மருத்துவர் எம்.விஸ்வநாதனின் 100வது பிறந்த நாளைக் கொண்டாடும் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் புதிய இலட்சினையை வெளியிட்டு பேசிய அவர், பேராசிரியர் எம்.விஸ்வ நாதன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழகத்திலேயே முதல்முறையாக 50 ஆண்டு களுக்கு முன்னர் நீரி ழிவு சிகிச்சை பிரிவை தனிப் பிரிவாக தொடங்கியவர் என்றார். பின்தங்கிய மக்கள் அதிகமாக வாழும் வடசென்னை ராய புரத்தில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையை தொடங்கி வியாபாரமாக அல்லாமல் மருத்துவ சேவை நிறுவனமாக தொடர்ந்து நடத்தியவர் அவர் என்றும் அவரது சேவையை அவரது புதல்வர் மருத்துவர் விஜய் விஸ்வநாதன் செய்து வரு கிறார் என்றும் அவர் கூறி னார். நீரிழிவு நோய் குறித்து ஏராளமான ஆராய்ச்சி களை செய்தவர் பேராசி ரியர் விஸ்வநாதன் என்றும் உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம் ஆகிய வற்றால் இந்நோயை வென்று காட்டாலம் என்றும் அவர் குறிப்பிட்டார். தகுந்த முன்னெச்சரிக்கையாக இருந்தால் மரபணு ரீதியாக வரும் நீரிழிவு நோயை கூட தடுக்கமுடியும் என்றும் அவர் குறிப் பிட்டார். தமிழ்நாடு மருத்து வத்தில் முன்னணியில் இருந்தா லும் அதிகளவில் நீரிழிவு நோயாளிகளை கொண்ட மாநிலமும் இது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக பேராசிரியர் எம்.விஸ்வநாதனின் 100-வது பிறந்த தினத்தை அனு சரிக்கும் வகையில் இலவச உடல்நல பரி சோதனை முகாமும் சென்னை மாநகராட்சிக்கு மரக்கன்றுகள் வழஙகும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராய புரம் சட்டமன்ற உறுப்பி னர் ஐடிரீம்ஸ் ஆர் மூர்த்தி, எம்வி. நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் டாக்டர். விஜய் விஸ்வநாதன், மருத்துவ மனையின் மருத்துவர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.