districts

மழைநீர் கால்வாய்களை சீரமைக்க மாநகராட்சி, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு

சென்னை, ஜூலை 20- தண்டையார்பேட்டையில் மழைநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைப்பது குறித்து மாநகராட்சி, ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தண்டையார்பேட்டை மண்ட லத்துக்கு உட்பட்ட 40, 41, 42, ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் செல்வதற்கான வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தண்டையார்பேட்டை இளைய தெரு, கருணாநிதி நகர், தமிழன் நகர், நேரு நகர், கொருக்குப்பேட்டை கண்ணன் தெரு, சேனியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழை நீர் செல்லும் இடங்களில் ஆங்காங்கே மழை நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, சென்னை மாநகராட்சி 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு கணேசன், தெற்கு ரயில்வே கோட்ட பொறியாளர் விகாஸ் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் சனிக்கிழமை (ஜூலை 20)  ஆய்வு செய்தனர். கொருக்குப்பேட்டை கண்ணன் தெரு, ரயில்வே கிளாசிக் பகுதியில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாயை தூர் வாரவும், உயர்த்தி அமைக்கவும் ஆலோசனை நடத்தினர். அதேபோல் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் பின்புறம் புதார் மண்டி இருப்பதை அகற்றவும் அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். தண்டையார்பேட்டை நேரு நகர், எண்ணூர் நெடுஞ்சாலை பகுதிகளில் ரயில்வே தண்டவாளம் அருகே ஆக்கிர மிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடு களை அகற்றுவது குறித்தும் அங்கு உள்ள கால்வாயை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர். புது வண்ணாரப்பேட்டை இந்திரா காந்தி நகர், வஉசி நகர், ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள மழை நீர் செல்லும் கால்வாயை தூர்வாரி மழைக்காலங்களில் தடையின்றி மழைநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கவுன்சிலர்  விமலா வலியுறுத்தினர். அதேபோல் தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் வழியாக பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி கால்வாயை சீரமைப்பது மற்றும் தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம் அமைப்பது குறித்தும் ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து 2 கி.மீ. தூரத்திற்கு எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வேக்கு சொந்தமான காலியாக உள்ள குளத்தை  ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து வாங்கி மாநகராட்சி சார்பில் பூங்கா அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முறையாக மழைநீர் பக்கிங்காம் கால்வாயில் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர்கள் பா.விமலா, குமாரி நாகராஜ், ரேணுகா, மாநகராட்சி 4ஆவது மண்டல அதிகாரி விஸ்வ நாதன், ரயில்வே உதவி செயற்பொறி யாளர் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.