எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் தேர்தல் கால வாக்குறுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 1500 செவிலியர் பணியிடங்களை எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் இனியா தலைமை தாங்கினார்.